திங்கள், 18 ஜூன், 2012

விமான இயக்கம்

நாம் பல முறை அன்னாந்துப் பார்த்து ஆகாயத்தில் தவழும் விமானத்தை வியப்போடு பார்த்திருக்கிறோம். பலர் பல முறை அதில் பயணிக்கவும் செய்திருக்கிறோம்.

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்.

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்

சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…

இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag

ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது.

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது விமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது

எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேலிருக்கும் விசிரியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சின் தான் , சற்று மறைமுகமாக

விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும். விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner ) பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்.

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்ளதாக இருக்கும்

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? 

சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? 

விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது.

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது....

வெள்ளி, 18 மே, 2012

ELECTRICITY


By என். ராமதுரை
18 May 2012 01:41:14 AM IST

சூரிய மின்சாரம் கைகொடுக்குமா?
கூடங்குளம் அணுமின்சார நிலையம் தொடர்பாக எழுந்த சர்ச்சையின் பின்னணியில் பலரும் தெரிவித்த ஒரு யோசனை பெரிய அளவில் சூரிய மின்சாரத்தின் பக்கம் திரும்பலாமே என்பதுதான். சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். இது நன்கு நிரூபணமான ஒன்று. இதைத்தான் சூரிய மின்சாரம் என்கிறார்கள்.
சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது என்பது ஏதோ இப்போது தோன்றியது அல்ல. 1958}ஆம் ஆண்டில் பூமியைச் சுற்றும் வகையில் பறக்கவிடப்பட்ட வான்கார்ட் என்ற அமெரிக்க செயற்கைக்கோளில்தான் சூரிய மின்பலகை முதல் தடவையாகப் பயன்படுத்தப்பட்டது.பின்னர் செயற்கைக்கோள்களில் இதை இணைப்பது வாடிக்கையாகியது.
நீங்கள் இப்போது உங்கள் வீடுகளில் டிவியில் பல்வேறு சேனல்களில் நிகழ்ச்சிகளைக் காண்கிறீர்கள் என்றால் அதற்கு சூரிய மின்சாரமே காரணம். டிவி நிகழ்ச்சிகளை நீங்கள் காண்பதற்கு சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கின்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் முக்கியமாக உதவுகின்றன. இந்த செயற்கைக்கோள்களில் உள்ள கருவிகள் இயங்குவதற்கு மின்சாரம் தேவை.
செயற்கைக்கோள்களின் இருபுறங்களிலும் இறக்கை போல பொருத்தப்பட்ட பெரிய வடிவிலான சூரிய மின் பலகைகள் மீது சூரிய ஒளி படும்போது அவற்றில் மின்சாரம் உற்பத்தியாகிறது. அந்த மின்சாரத்தை செயற்கைக்கோளில் உள்ள கருவிகள் பயன்படுத்திக் கொள்கின்றன.
பல ஆண்டுக்காலம் சூரிய மின்சார உற்பத்தி பெரிய அளவில் நடக்கின்ற இடம் விண்வெளியாகவே இருந்தது. சூரிய மின் பலகைகளைத் தயாரிப்பதற்கு நிறைய செலவு ஆனதே இதற்குக் காரணம். சூரிய மின் பலகைகளைத் தயாரிப்பதில் மேலும் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டது. இவற்றுக்கான மூலப் பொருளின் செலவு படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. இதன் பலனாக மின் இணைப்புக்கு கம்பிகளை இழுக்க முடியாதபடி எட்டாக் கையாக உள்ள இடங்களில் மின் உற்பத்திக்கு சூரிய மின் பலகைகள் பயன்படுத்தப்பட்டன. தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே இம்மாதிரியான இடங்களில் சூரிய மின் பலகைகள் பயன்படுத்தப்பட்டன.
பின்னர் அடுத்த கட்டமாக கணிசமான அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சூரிய மின்பலகைகள் பயன்படுத்தப்படலாயின. இதைத் தொடர்ந்து சூரிய மின்சார நிலையங்கள் தோன்றின. சூரிய மின்சார நிலையம் பார்ப்பதற்கு மின்சார நிலையம் போலவே இராது. திறந்த வெளியில் அடுத்தடுத்து ஏராளமான மின் பலகைகள் நிறுவப்பட்டிருக்கும். இவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்.
எனினும் உற்பத்தி அளவில் சூரிய மின்சார நிலையங்களை நிலக்கரியால் இயங்கும் அனல் மின் நிலையங்கள் அல்லது அணுமின் நிலையங்களுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் சூரிய மின் நிலையத்தின் மின்சார உற்பத்தி மிகவும் குறைவானதே. உலகிலேயே மிகப் பெரிய சூரிய மின்சார நிலையம் சீனாவில் உள்ளது. இதன் மின் உற்பத்தித் திறன் 200 மெகாவாட். இத்துடன் ஒப்பிட்டால் உலகிலேயே மிகப் பெரிய அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் 5700 மெகாவாட். இது பார்மோசாவில் உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய அணுமின் நிலையத்தின் (ஜப்பானில் உள்ளது) உற்பத்தித் திறன் சுமார் 8000 மெகாவாட்.
வேறு விதமாகச் சொல்வதானால் இப்போதுள்ள சூரிய மின் நிலையங்கள் அனைத்துமே மிகச் சிறியவை. சூரிய மின் நிலையங்களைக் கொண்டு ஒரு நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்துவிட முடியாது என்ற நிலைமை தான் இன்னமும் உள்ளது.
சூரிய மின் நிலையங்களில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகையில் சூரிய மின் பலகைகள் மீது வெயில் படும்போது நேரடியாக மின்சாரம் உற்பத்தியாகிறது. உலகில் செயல்படும் சூரிய மின் நிலையங்களில் அனேகமாக அனைத்தும் இந்த வகையைச் சேர்ந்தவை. இந்த வகையில் வெப்பம் சம்பந்தப்படாது. இரண்டாவது வகையானது வெப்பம் சம்பந்தப்பட்டது. அதாவது திறந்த வெளியில் உயரமான கோபுரம் இருக்கும். இதன் உச்சியில் ஒரு தொட்டியில் திரவம் இருக்கும். இந்த கோபுரத்தைச் சுற்றிலும் முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற எண்ணற்ற கண்ணாடிகள் தரையில் பொருத்தப்பட்டிருக்கும். இக்கண்ணாடிகள் அனைத்தும் சூரிய ஒளியை அக் கோபுரம் மீது திருப்பும். இதன் விளைவாகக் கோபுர உச்சியில் உள்ள திரவம் சூடேறி கீழ் நோக்கிப் பாயும். சூடான திரவம் ஒரு ஜெனரேட்டரை இயக்கும்போது மின்சாரம் உற்பத்தியாகும். இவ்வகையான சூரிய மின் நிலையம் இப்போது உலகில் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளன. இவ்வகை மின் நிலையத்திலும் மின்சார உற்பத்தி அளவு குறைவுதான்.
சூரிய மின் நிலையங்களில் பொதுவில் சில பாதக அம்சங்கள் உள்ளன. ஆண்டில் 300 நாட்கள் வெயில் அடிக்கும் இடங்களே சூரிய மின் நிலையங்கள் அமைப்பதற்கு உகந்தவை. தவிர, பகல் நேரங்களில் மட்டுமே மின் உற்பத்தி சாத்தியம். சூரிய மின் பலகைகளை அமைக்க நிறைய இடம் தேவை. மின் பலகைகள் பலவற்றின் மீது வெயில் விழ, சிலவற்றின் மீது நிழல் விழுகின்ற நிலைமை ஒருபோதும் இருத்தல் கூடாது. அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேக மூட்டம் இருந்தால் அந்த அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்படுமே தவிர, மற்றபடி பாதகம் இராது. பொதுவில் நடுப்பகல் வாக்கில்தான் சூரிய மின் பலகைகள் மூலம் அதிக மின்சாரம் உற்பத்தியாகும். முற்பகல் அல்லது பிற்பகலில் அந்த அளவுக்கு மின்சார உற்பத்தி இராது. இரவு வேளையில் மின் உற்பத்திக்கு சாத்தியமே இல்லை. இப்படியான காரணங்களால் ஒரு நாட்டின் மொத்த மின்சாரத் தேவையையும் சூரிய மின்சாரத்தின் மூலம் பூர்த்தி செய்ய இயலாது.
சூரிய மின்சாரம் பற்றி மக்களிடையே பொதுவில் உள்ள ஓர் எதிர்பார்ப்பு பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அரசாங்கம் அதாவது, மின் வாரியங்கள் ஆங்காங்கு சூரிய மின்சார நிலையங்களை அமைத்து மின் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்கும் என்று மக்களில் பலரும் நினைக்கலாம். ஆனால், அது முற்றிலும் தவறு. அரசாங்கம் கூறுவதே வேறு. சூரிய ஒளியைப் பயன்படுத்தி நீங்களே மின்சாரம் தயாரித்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்வதற்கு நாங்கள் மானியம் தருகிறோம் என்றுதான் அரசாங்கம் கூறுகிறது. அரசாங்கத்தின் இவ்வித மானிய உதவியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வோர் இரு வகைப்பட்டவர்கள். ஒரு வகையினர், அதாவது தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் முதலீடாக நினைத்து சூரிய மின் நிலையங்களை அமைக்கிறார்கள். தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை இந்திய அரசின் தேசிய அனல் மின் கழகத்துக்கு விற்பனை செய்துவிடுகிறார்கள். அதாவது நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் ஒரு யூனிட் 12 ரூபாய் என்ற அடிப்படையில் அவர்கள் விற்று விடுகிறார்கள. இது நல்ல ஏற்பாடாக இருப்பதால் பல நிறுவனங்கள் இவ்விதம் சூரிய மின் நிலையங்களை அமைக்கின்றன.
இரண்டாவது வகையினர், சொந்த உபயோகத்துக்காக சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்பவர்கள். தனியார் துறையிலான ஆலைகள், நிறுவனங்கள், வீடுகள் ஆகியோர் இப் பிரிவில் அடங்குவர். நிறுவனங்கள் அல்லது வீடுகளின் கூரைகளில் சூரிய மின் பலகைகளைப் பொருத்தினால் போதும்.
பெரிய பராமரிப்பு எதுவும் தேவையின்றி மின்சாரம் கிடைத்துக் கொண்டிருக்கும். ஆனால், ஆரம்ப முதலீட்டுச் செலவு மிக அதிகம். அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளிலேயே ஆரம்ப முதலீடு பெரிய தொகையாகக் கருதப்படுகிறது.
தவிர, சூரிய மின்சாரம் அதிக செலவு பிடிப்பதாகும். இதற்கான உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு சுமார் 12 ரூபாயாக உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மின்சார வாரியங்கள் சராசரியாக ஒரு யூனிட்டுக்கு ரூ. 4 முதல் ரூ. 5 வரை மின்கட்டணம் வசூலிப்பதாகக் கூறலாம். ஆகவேதான் மின்சார வாரியங்கள் சூரிய மின்சார உற்பத்தியில் ஈடுபடத் தயாராக இல்லை. மின்சார வாரியங்களில் பலவும் நஷ்டத்தில் இயங்கும் நிலையில் அவை ரூ. 12 செலவிட்டு மின்சாரம் உற்பத்தி செய்து அதை ரூ. 5 அல்லது ரூ. 6-க்கு விற்க முன் வராது.
நாங்கள் மானியம் தருகிறோம். நீங்களே உங்கள் வீடு, அலுவலகம், ஆலை ஆகியவற்றின் மாடியில் சூரிய மின் பலகைகளை நிறுவி உங்களுக்குத் தேவையான மின்சாரத்தை தயாரித்துக் கொள்ளுங்கள் என்பதே மாநில அரசுகளின் கோஷமாக உள்ளது.
வருகிற ஆண்டுகளில் தமிழகத்தில் வசதி படைத்த பலரும் வசதி படைத்த ஆலைகளும் எப்படியாவது மின்சாரம் கிடைத்தால் சரி என்ற எண்ணத்தில் சூரிய மின்சாரத்துக்கு மாற வாய்ப்பு உள்ளது. இப்படி சொந்தமாக மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வது லாபகரமானதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மின்சார வாரியம் உங்களுக்கு அளிக்கும் மின்சாரத்தின் விலையும் சூரிய மின்சாரத்தை நீங்களே உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவும் சரி சமமாக இருக்குமானால் சூரிய மின்சாரம் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலேயே இந்த சம நிலை எட்டப்படவில்லை. ஓட்டு உட்பட பல்வேறு காரணங்களால் மின் கட்டணம் குறைவான நிலையில் வைக்கப்பட்டுள்ள இந்தியாவில் இந்த சம நிலை எட்டப்பட பல ஆண்டுகள் ஆகலாம்.
இது ஒருபுறம் இருக்க, அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பின்பற்றப்படுகின்ற ஒரு ஏற்பாடு இந்தியாவுக்கும் வருமானால் இங்கும் சூரிய மின்சாரம் வேகமாகப் பரவலாம். ஆரம்ப முதலீடு அதிகம் என்பதுதானே பலருக்கும் பிரச்னையாக உள்ளது. அதை கலிபோர்னியா நிறுவனம் கவனித்துக் கொள்கிறது. அதாவது அவர்களே எல்லாச் செலவும் செய்து உங்கள் வீட்டு மாடியில் சூரிய மின் பலகைகளை நிறுவி விடுவார்கள். நீங்கள் மாதாமாதம் மின் கட்டணம் கட்டுவது போல அந்த நிறுவனத்துக்குப் பணம் கட்டினால் போதும். இந்த ஏற்பாட்டில் அந்த நிறுவனத்துக்கு ஆதாயம் உள்ளது.
அடிப்படையில் பார்த்தால் தனியார் துறையினர் நல்ல பணம் பண்ண சூரிய மின்சாரம் புது வழியைத் திறந்து விட்டுள்ளது. அந்த வகையில் தனியார் துறையினருக்கு நல்ல மகிழ்ச்சி. மாநில அரசுகளின் மின்சார வாரியங்களுக்கும் மகிழ்ச்சிதான். மக்கள் தாங்களே மின்சாரத்தை தயாரித்துக் கொள்ளும் போது மின்சார வாரியங்கள் மீதான சுமை குறையத்தான் செய்யும். அந்த அளவில் மின் வாரியங்கள் சந்தோஷப்படத்தானே செய்யும்.

வியாழன், 17 மே, 2012

இலங்கை விவகாரம்..


மே பதினேழு முடிவல்ல தொடக்கமும் அல்ல -தமிழ் சோறு முக ஏட்டுக்குழுமம்

எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழ் பேசும் சொந்தங்களே! உங்கள் அனைவருக்கும் எமது பணிவான வணக்கங்கள்! இன்றைய நாளில் எமது தேசியத்தின் விடிவுக்காகவும் எமது சுபீட்ச வாழ்வுக்காகவும் எமது உரிமைகளுக்காகவும் போராடி தமது இன்னுயிரை எமக்காக ஈந்த ஒப்பற்ற வீரன் ஒருவனது நினைவு நாளாகவே இருக்கும்! ஒரு வருடத்தின் அனைத்து நாட்களுமே அவர்களில் சிலரோ பலரோ தமது இன்னுயிர்களை எமக்காக/ எமது மொழிக்காக/எமது மண்ணுக்காக ஈந்துள்ளனர்! போராட்டத்தின் தளங்கள் வேண்டுமானால் மாறியிருக்கலாம் இந்திய தேசிய விடுதலைப்போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழீழ விடுதலைப் போராட்டம், பாசிசப்படுகொலைகள் சாதியப் படுகொலைகள் என நீண்டு விரிந்த பரப்பெல்லைகளையும் வரலாறுகளையும் கொண்டவை! நீங்கள் இந்த அறிக்கையை படித்துக்கொண்டிருக்கும் இதே நாளில் அன்று எமது விடுதலைக்காகவும் எமது தேசிய விடிவுக்காகவும் யாரோ ஒரு உயிர்க்கொடையாளி எமக்காக உயிர் நீத்திருப்பான்! யாரோ ஒரு தியாகியினது குரல்வளை நசுக்கப்பட்டிருக்கும்! 

இந்த அவலத்தில் இருந்து விடுபடமுடியாமல் அடிமைப் பட்டுக் கிடப்பதே அன்றிலிருந்து இன்றுவரை எமது சமூகத்திற்குப் பெரும் சாபக்கேடாக அமைந்துவிட்டது! அன்னியர்களால் எமது குரல்வளை நெரிபட்டதை விட எமது உறவுகளாலும் எம்மால் தெரிவுசெய்யப்பட்ட ஆட்சியாளர்களாலும் எமது கழுத்தும் எமது இனத்தின் ஆன்மாவினது குரல் வளையும் நெரிபட்டதே அதிகம். ! நாம் ஒருதடவை இதைப்புரிந்துகொண்டு அடுத்தமுறை அப்போது இவற்றுக்கெதிராகக் குரல்கொடுத்தவரை ஆட்சிக்கட்டிலில் ஏற்றி அழகுபார்க்கிறோம்! அதுவரை நல்லவர்களாகவும், எமது உறவினர்களாகவும், எமது காவலர்களாகவும் நடித்துக்கொண்டிருந்த எமது அறிக்கைகளால் சவடால் விட்டுக்கொண்டிருந்த எமது நம்பிக்கையாளர்கள் தமது கைவரிசையை காட்ட உரிய களமாக இந்த ஆட்சிக்காலத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர்!
அரசியல் என்றால் என்ன? ஜனநாயகம் என்றால் என்ன? ஆட்சி அதிகார எல்லைகள் என்றால் என்ன என்பது முதல் வெளியுறவுக்கொள்கை, அந்நியத் தலையீடு! ,வர்த்தக உடன்படிக்கை போன்ற விடயங்கள் வரை எம்மில் பலருக்குத் தெரிந்திருப்பதில்லை! அவற்றை நாம் தெரிந்திருப்பதை ஆட்சியாளர்கள் விரும்புவதும் இல்லை என்பதே உண்மை! கேள்விகள் அதிகரித்தால் கொள்ளை அடிப்பது கடினம் என்பதே அவர்களின் ஒரே தாரக மந்திரம்! இருந்தாலும் கேள்விகள் எழாமல் இருப்பதுமில்லை, கொள்ளைகள் நடைபெறாமல் இருப்பதுமில்லை! காரணம் கேள்வி கேட்பவன் கேள்விகளைத்தேடுவதில்லை ஆனால் கொள்ளைக்காரன் அதற்க்கான வழிகளைத்தேடிக்கொண்டே இருப்பான்! இங்கு கேள்வி என்பது ஆட்சியாளர்கள் மீது தொடுக்கப்படும் கேள்விகளையும் கொள்ளை என்பது ஆளூம் வர்க்கத்தினரால் சுரண்டப்பட்டு குவிக்கப்படும் மக்கள் பணம் உள்ளிட்ட உழைப்பையும் குறிக்கிறது! இவைபற்றி உதாரணங்கள் அவசியமில்லை என கருதுகிறோம் தொடர்ந்து வாசியுங்கள் இலகுவாக புரியும்!இன்று பார்ப்பனிய எதிர்ப்பு/ காங்கிரஸ் ஏகாதிபத்திய எதிர்ப்பு/ எனத்தோன்றிய திராவிடக்கட்சி பின்னர் அதன் நடவடிக்கைகளால் அதிலிருந்து பிரிந்த ஏனைய திராவிட கட்சிகள் மேற்குலக முதாளித்துவ சுரண்டலுக்கு எதிராக தோன்றிய சமவுடமை, பொதுவுடைமை சித்தாந்தங்களை உள்வாங்கிய கட்சிகள், தமிழ்த்தேசியம் என்ற அவசியமான கருத்துருவை உள்வாங்கி புதிதாக நடைபோட ஆரம்பித்துள்ள தமிழுனர்வுக்கட்சிகள் என்பன எவ்வளவு தூரம் தமது உண்மையான முகத்தோடு நடை போடுகின்றன எப்படிப்பட்ட முக மூடியை அவை அணிந்துகொண்டுள்ளன யாரால் எப்படிப்பட்டவர்களால் அவை இயக்கப்படுகின்றன அவை எப்படிப்பட்ட நாடகங்களை ஆடுகின்றன அவற்றின் உண்மையான தோற்றம் எப்படிப்பட்டது? இவர்கள் ஏன் அரசியல் ௯த்தாடுகின்றார்கள்? அரசியல் கோமாளி வேடம் போடுகிறார்கள்? எதற்கு வித்தைக்காரராகிறார்கள்? என்று அவர்களது உண்மை உருவத்தை கோடிட்டுக் காட்ட அவர்களது போலி ஆடைகளை/வேடங்களை களைந்து அவர்களை அம்மணமாக உங்கள் முன் நிறுத்தவேண்டிய சமூகக் கடப்பாடு எமது கைகளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது! அல்லது நாம் கைப்பற்றியிருக்கிறோம் என்று சொல்வது ௯ட பொருத்தமாக இருக்கும்!

இந்த நிலையில் நாம் ஒவ்வொரு கட்சிகளின் மீதும் வைக்கப்போகும் கேள்விகளுக்கும் அவர்கள் மீது வைக்கப்போகும் விமர்சனங்களுக்கும் அவர்களது கடமைகள் என்று பட்டியலிடப்போகும் விடயங்களுக்கும் சம்மந்தப்பட்டவர்கள் ஆத்மார்த்தமான பதிலையோ ஆக்க பூர்வமான நடவடிக்கைகளையோ எடுக்கவேண்டும் என நாம் விரும்புகிறோம்! இந்த விருப்பம் எமது சிற்றின்ப வேட்கையோ அல்லது பெருமை தேடும் படலமோ இல்லை! அதற்கு நாங்கள் அரசியல் வித்தைக்காரர்களும் இல்லை! இந்த வினாக்களும் விமர்சனங்களும் மக்களிடம் உண்மைகளைக் கொண்டுபோய் சேர்ப்பதற்காகவும் உங்களிடம் உள்ள போலியான நிலைப்பாடுகளை சுட்டிக்காட்டவும் நீங்கள் கடந்துவந்த பாதைகளில் இருந்த நேர்மையானதும் போலியனதுமான பக்கங்களை கோடிட்டுக்காட்டவுமே இந்த அறிக்கையை முன்வைக்கிறோம்தமிழகத்தில் ஆரம்பத்தில் புரட்சிகரமாக காங்கிரஸ் என்கிற எதேச்சதிகார கும்பலின் பிடியில் இருந்து வெளியேறி பேரறிஞர்அண்ணா அவர்களால் திராவிட முன்னேற்றக்கழகம் உருவாக்கப்பட்டு பெரு வளர்ச்சியும் வெற்றியும் கண்டது. மத்தியில் ௯ட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்துடன் புறப்பட்ட இந்த பலம் பொருந்திய அணி அண்ணாவின் மறைவோடு -ஒரு மனிதத்தின் எடுத்துக்காட்டின் வீழ்ச்சியோடு- கலைஞர் அய்யாவின் சட்டைப்பைக்குள் வந்து விழுந்து- கோபாலபுரத்துக்குள் குடியேறத்தொடங்கி- குறுகிக்கொண்டது!
குழந்தைக்கு தந்தை நான் ஆனால் தாய்க்கு நான் கணவனல்ல என்று தமிழர் பண்பாட்டையே கேலிக் ௯த்தாக்கிய கலைஞர் அய்யாவை அன்றே தமிழ் தேசத்தில் இருந்து தமிழினம் வெளியேற்றத்தவறியதுதான்.... முள்ளிவாய்க்கால் மனிதப்பேரழிவு வரை தமிழினத்தை இட்டுச்சென்றதும்- இன்றும் தனது பசப்பு வார்த்தைகளை நம்பி அவர் தமிழர்களை ஏமாற்றத் துணிந்து நிற்பதற்கும் காரணம். வாய்ப்பேச்சில் எதிரிகளை வீழ்த்தி சந்தர்ப்பவாதத்தால் தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்து வந்திருப்பதை கலைஞரது ஒவ்வொரு சின்னஞ்சிறு அசைவுகளிலும் கண்டறியலாம்/ மக்கள் பணத்தில் வரியைப்பெறும் அரசாங்கம் மக்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அதன் பணி. ஆனால் ஏதோ தன்னுடைய சொந்தப்பணத்தை போட்டு மக்களுக்கு உதவி செய்வதாக பந்தா காட்டி இலவசங்களையும் சலுகைகளையும் லஞ்சத்தையும் நம்பி அரசியல் செய்தவரும் அதன் முன்னோடியும் கலைஞர் அவர்களே!திருக்குவளையில் இருந்து தூக்குப் பையோடு சென்னைக்கு வந்தார் கலைஞர் அவர்கள் இன்று அவரது சொத்து மதிப்பு என்ன? ஆசியாவின் முதல் பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றது எப்படி?இது யாருடைய பணம்? கண்டிப்பாக இது நம் பணமே! லஞ்சமாகவும், சட்ட விரோதமாகவும், மக்கள் பணிகளுக்கென ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளில் ''சுட்ட'' பணமுமே கலைஞர் அய்யாவை இவ்வளவு சொத்துக்கு அதிபதியாக்கியுள்ளது! அவரது அவ்வளவு சொத்துக்களையும் மதிப்பீடு செய்தால் வரும் பணம் தமிழ் நாட்டை ஏழைகள் இல்லாத மாநிலமாக மாற்ற போதுமான தொகை வருகிறது! அப்படியானால் ஒரு நேர்மையான தலைவரிடம் தமிழகம் சென்றிருந்தால் இன்று தமிழ் நாடு ஏழைகள் இல்லா மாநிலமாக மாறியிருக்குமா இல்லையா?கலைஞர் அவர்கள் தமிழில் பேசுவதில் எதிரிகளை மடக்குவதில் வல்லவர்தான் ஆனால் அது தலைவருக்குரிய தகுதியல்ல அவர் ஒரு விகடகவியாகவே இருக்க அந்த தகுதி போதுமானதாகிறது! அப்படியானால் நீங்கள் ஒரு விகடகவியையே தலைவானாக்கி வைத்திருந்திருக்கிரீர்கள்! அவரை விகடகவி என்று நான் சொல்வதற்கு காரணம் வாய்ப்பேச்சில் மட்டுமன்றி அவர் யாரது கழுத்தையும் வெட்டி தான் பதவியை தக்கவைக்க முடியுமென்றால் அல்லது தன் குடும்பத்தை வளப்படுத்த முடியுமென்றால் தன்னுடன் ௯ட இருப்பவர்களின் கழுத்தையே அறுப்பார் /இதற்கு சான்று தா.கிருட்டிணன் படுகொலை
தனக்கு தேவைப் பட்டால் பெரியாரையும் பகுத்தறிவையும்கையிலெடுத்துக் கொள்ளும் இவர் காவிகளின் கரம்பற்றி பாராளுமன்றத்துல் பவனிவருவார்!தன் மக்களை தில்லி மந்திரிகளாக்க இந்தியும் படிக்க வைப்பார்! மகனை அனுப்பி இந்தியை தார் பூசி அழிக்கசெய்வார்! நீங்களும் தமிழ் வாழ்க/இந்தி ஒழிக என்பீர்கள்!ஊழலில் மாட்டிக்கொள்ளும் போது அய்யகோ பார்ப்பனிய ஊடகங்கள் தமிழினத்தை அழிக்கப் பார்க்கிறது என்பார்! அவரைப் பொறுத்தவரை தமிழினம் என்பது ''அவர் குடும்பம்'' மட்டுமே! உண்மையில் அவர் தமிழினம் கோடியில் புரள்கிறது/தமிழனுக்கு இடரென்றால் கடிதம்? குடும்ப ''விவகாரம்'' என்றால் விமானம் ஏறி தில்லி செல்வது!!ஏன் இந்த ஏமாற்று வேலை?
 ஈழத்தில் எம் உறவுகள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டபோது இரண்டு மணிநேர உண்ணாநோன்பு நாடகம் நடத்திய கலைஞர் அடுத்தநாளே மீண்டும் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி வந்தபோது மீண்டும் உண்ணா நோன்பு இருக்காமல் விட்டது ஏன்? தனது மகளுக்காக டெல்லிவாசலில் தவமிருந்த கலைஞர் ஈழப்பிரச்சனைக்காக ஒரு முறையேனும் டெல்லிக்கு செல்லாதது ஏன்? [இவை பற்றி மேலும் தெளிவாக வைகோ, சீமான் போன்றவர்கள் அவரது போலி முக மூடியை நன்றாகவே கிழித்துள்ளனர் அவற்றையும் கேளுங்கள் உங்களுக்கு நன்றாக விளங்கும்]இப்போது ஈழமக்கள் இறந்து மண்டையோடு இத்துப்போகும் வேளையில் டெசோ என்ற சொல்லை கையில் எடுத்திருப்பது மீண்டும் ஆட்சியை பிடித்து தமிழக மக்களை சுரண்டி மேலும் தன குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவே தவிர உண்மையான ஈழ மக்கள் மீதான எந்த அக்கறையோ அனுதாபமோ அல்ல!
அடுத்து எம்ஜிஆர் அவர்களது முயற்சியால் அவர் பின்னே திரண்ட உண்மைத்தொண்டர்களின் உழைப்பில் அதிமுக என்ற கட்சி மலர்ந்தது! அவருடைய ஆட்சிக்காலத்தில் நம் ஈழப் போராளிகள் தமிழகத்தின் செல்லப் பிள்ளைகளாகவே வலம் வந்தனர்/ அவருடைய ஆட்சிக் காலத்தில் திமுக எனும் கட்சி எழவேமுடியவில்லை! எம்ஜிஆர் என்ற ஒரு மனிதனின் மறைவுக்குப்பின் ஜெயலலிதா எனும் அம்மையாரின் கைகளுக்கு வந்த அதிமுக என்ற கட்சி அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக பலமுறை பந்தாடப்பட்டுள்ளது! திராவிடர் கழகத்தின் முதன்மை எதிரியான் பார்ப்பனனிடம் ஒப்படைக்கப் பட்டது! கட்சியின் ஏகபோக உரிமையை குத்தகைக்கு எடுத்ததன் விளைவு பல ஆயிரம் தொண்டர்களின் பதவி பறிக்கப்பட்டது! பெரியார் உருவாக்கிய பகுத்தறிவுப் பாசறையில் மஹாமகம் நடத்தப் பட்டது, கரசேவைக்கு கரம் கொடுக்கப் பட்டது, மத வாத சக்திகள் வளர்த்து விடப் பட்டனர், மாற்று மதத்தினர் அச்சுறுத்தப் பட்டனர், பண்டைய இந்துத்துவ கொள்கைகள் நடைமுறைப் படுத்த்ப் பட்டன, பாரதீய ஜனதாவின் கொள்கை துணைக்கட்சி போன்றே அதிமுக மாற்றப் பட்டது! கலைஞருக்குப் போட்டியாக சொத்தைக்குவிப்பதில் எந்த குறைச்சலும் இல்லாமல் வகை தொகையாக வாங்கிக் குவித்தபோதும் கலைஞர் அய்யாவை எட்டிக்௯ட பிடிக்க முடியவில்லை என்பது அம்மையாருக்கு வருத்தமான செய்திதான்!
ஆனால் இங்கு ஒரு விடயத்தை கவனித்தீர்களானால் புரியும் நீங்கள் மாறி மாறி ஆட்சியில் இருத்திய இவர்கள் இருவரும் தமக்கு சொத்து சேர்ப்பதை மட்டுமே சரிவர செய்துள்ளனரே தவிர மக்களுக்காக என்ன உருப்படியாக செய்தார்கள்? காவிரிப்பிரச்சினை, முல்லைப்பெரியாறு என்று மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் எதிலாவது இவர்கள் ஒழுங்கான ஒரு முடிவை எடுத்துள்ளார்களா? ஆனாலும் அவர்களே மாறி மாறி ஆட்சியை பிடிப்பதன் மர்மம் என்ன? மக்களுக்காக வாழ்ந்த அறிஞர் அண்ணாவை தங்கள் போஸ்டர்களில் மட்டுமே இவர்கள் வைத்துள்ளார்கள். ஜெயலலிதா அம்மையாரை தமிழக முதல்வராகவோ அல்லது கட்சித்தலைவியாகவோ ஏற்றுக் கொண்டமைக்கும் குஸ்புவுக்கு கோவில் கட்டியதற்கும் அசினுக்கு பாலாபிசேகம் செய்ததற்கும் எந்த விதமான வித்தியாசமும் அடிப்படையில் இல்லை! இப்போ இதற்கும் கலைஞர் அய்யாவும் ஜெய அம்மாவும் அது அவர்களுக்கே கொடுக்கவென சேர்த்த சொத்து அவர்களிடம் சேர்க்குமுன் சிபிஐ தவறாகப் பிடித்துவிட்டது என்று அறிக்கை விட்டாலோ அதை மக்களாகிய நீங்கள் நம்பினாலோ ஆச்சரியப்பட எதுவும் இல்லை!இதே ஏமாற்றல்/ ஏமாறல் தானே தொடர்ந்து வந்துள்ளது? எனவே மக்களாகிய நீங்கள் இந்த இருகட்சிகளையும் விட்டு முதலில் நீங்கள் வெளியே வாருங்கள்! யார் இவர்கள்? நீங்கள் இந்த உலகில் எதற்க்காக பிறந்தீர்கள்? தலைவனுக்கும் தொண்டனுக்கும் துதிபாடிப்பிழைக்க அல்லது தனியே துதிபாட என்ன சாபக்கேடு உங்களுக்கு? இவர்களுக்கு வாக்களித்து நீங்கள் உங்களுக்கும் உங்கள் சந்ததிக்குமாக பெற்றுக்கொண்டது என்ன? சில ஆயிரங்களுக்குள் உங்களை விலைபேசி உங்கள் வாக்குரிமையை விலைக்கு வாங்கும் இவர்களா உங்கள் தலைவர்கள்? இவர்களா உங்களுக்கு நன்மை செய்பவர்கள்?மாறி மாறி வந்த இரண்டு திராவிடக்கட்சிகளும் முன்பு இருந்த காங்கிரஸ் கட்சியை விட என்ன சாதித்துவிட்டார்கள்? சுயமரியாதை சுயமரியாதை என்று பேசி உங்கள் சுயத்தை வீரம்மிக்க பண்பாடுமிக்க தமிழனதும் தமிழ் மண்ணினதும் சுயத்தை டெல்லியில் அடகு வைத்ததைத் தவிர வேறு என்ன கிழித்திருக்கிறார்கள்? வெள்ளையனிடம் ஒட்டுமொத்தமாக சேர்ந்து போராடி பெற்ற சுதந்திரத்தை தாம் சுவீகரித்துக்கொண்டு உங்கள் உணர்வுகளுக்கோ உரிமைகளுக்கோ எந்தவொரு மதிப்போ மரியாதையோ தராது போவதற்கா அன்று வெள்ளையனிடம் எங்கள் மூதாதையர் நெஞ்சு நிமிர்த்திப்போராடினர்?
வீரம்மிக்க எம் தமிழ் இனத்தை பயன்படுத்திக்கொண்டு இன்று எங்கள் கச்சதீவை எமது அனுமதியின்றி சிங்களவனிடம் தாரை வார்த்ததும், தங்கள் மொழியை எம்மீது திணித்ததும், அதனால் எம் உறவுகள் இறந்ததும், முள்ளி வாய்க்காலில் எம் உறவுகள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட நாங்கள் துடித்தெழுந்து போராடிய போராட்டம் உட்பட எமது உணர்வுகளுக்கு தந்த மதிப்பு இதுதானா? இவை கடந்து போனவையாகவே இருந்து போகட்டும் இன்று ௯டங்குளம் மண்ணின் மைந்தர்களான எம் உறவுகள் தமது உரிமையை/எதிர்காலத்தை இழந்து நிற்கின்றனரே இதுதான் சுதந்திரமா? எங்கள் காணிக்குள் ஒருபிடி மண்ணை தவறாக வைத்து வேலி போட்டால் சண்டைக்குப்போகும் அந்த மக்களின் வாழிடமே கேள்விக்குள்ளகியுள்ளதே இதுதான் சுதந்திரம் பெற போராடியதன் பரிசா? இதுதான் சேர்ந்திருப்போம் என்பதினதும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதினதும் நன்கொடையா? இணைந்திருப்போம் என்று சொல்லிக்கொண்டு ஒருபகுதியினர் வாழவும் ஒருபகுதியினர் வஞ்சிக்கப்படவும் ஆள்வதுதான் சேர்ந்திருத்தலா? எதற்கு மத்திய ஆட்சியாளர்கள் இவ்வாறு எங்களை மட்டும் ஏமாற்ற வேண்டும்? நாங்கள் எதற்கு ஏமாற வேண்டும்? இதுபற்றி நாம் எவ்வளவு தூரம் சிந்திக்கத்தலைப்படுகிறோம்?வெள்ளையர்களை விரட்டி சுதந்திரம் பெற்றதன் விளைவுதான் என்ன? உங்கள் மனச்சாட்சியைத்தொட்டுச்சொல்லுங்கள் இவர்களை விட வெள்ளையன் நல்லவனல்லவா? எமக்கு அவன் ஏன் அணை கட்டவேண்டும்? புகையிரதம் எதற்க்குத்தரவேண்டும்? பெருந்தெருக்களை எதற்கு அறிமுகம் செய்யவேண்டும்? இப்படி ஏராளம் சொல்லலாம்.....ஆனால் அவை இல்லாமல் அவனால் இங்குள்ள வளங்களை அபகரிக்க முடியாதா? முடியும்! ஆனால் அவனிடம் கொஞ்சமாவது ஈரம் இருந்தது! ஆனால் அவனிடம் இருந்து போராடி இந்தப்பரந்த நிலப்பரப்பை மீட்க உயிர் கொடுத்துப்போராடியதற்க்கு தந்த பரிசு இந்தித்திணிப்பு! என்னே ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்? இதைத்தான் வளர்த்த கடா மார்பில் பாய்வது என்பது! இப்படி ஆயிரம் உதாரணங்களை சொல்லலாம்!
எம் அன்புக்கினிய மக்களே! நாம் கற்றுக்கொண்ட பாடங்களிலும் நமக்குப் புகட்டப்பட்ட பாடங்களிலும் இருந்து நாம் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம்! அதற்க்கு முன்னர் ஏனைய கட்சிகளில் உள்ள எம் உறவுகளுக்கும் தலைவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்!எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய மதிமுக பொதுச்செயலர் திரு வைகோ அய்யா அவர்களே, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல். திருமாவளவன் அவர்களே,பெரியார் திக கொளத்தூர் மணி அண்ணா அவர்களே, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களே, தமிழ் தேசப்பொதுவுடமைக்கட்சி தோழர் பெ மணியரசன் அவர்களே.நாம் தமிழர் கட்சி சீமான் அவர்க்ளே...கம்யூனிச தோழர்களே..இன்னும் முக ஏடு டுவிட்டர், ௯கிள்+ போன்ற சமூக வலைத்தளங்களில் பயணிக்கும் அறிவார்ந்த தமிழ் சமூக இளைஞர்களே! தமிழர்களே உங்கள் அனைவருக்கும் நாம் அன்போடும் உரிமையோடும் சில விடயங்களை பகிர்ந்து கொள்கிறோம்!இன்று ஒருவரை ஒருவர் சாடியும் அவரைக்கேட்டால் இவரைக்கேள் என்றும் இவரைக்கேட்டால் அவரைக்கேள் என்றும் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி ஆட்சிசெய்யும் இரண்டு கட்சிகள் தம்மளவில் பெரிய கட்சிகள் என்ற காரணத்தினால் உங்களது அரிய கொள்கைகளையும் அதிசிறந்த அரசியல் அபிலாசைகளையும் விழுங்கி ஏப்பம் விட்டு உங்களை தமது தேவைகளுக்கு வண்டியிழுக்கும் குதிரைகளாக பாவித்துகொண்டிருக்கின்றன!இதோ இன்று ஈழத்து படுகொலையைக் கண்டித்து நடைபெறும் நினவஞ்சலிப் பொதுக் கூட்டத்தினைக் கூட ஒன்றுபட்டு நடத்த முடியாத படி தமிழினம் எதிரிகளால் பிரிக்கப் பட்ட பேரவலம் நிகழ்கிறது ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு நாள் நிகழ்த்துகிறீர்கள்..இதனை ஈழத்து ஈகியரின் ஆன்மாவே ஏற்றுக்கொள்ளாது....
இந்த பேரவலம் அவர்களை பணக்காரர்களாகவும் தமிழகத்தை ஏழை மாநிலமாகவும் மட்டுமே ஆக்கியுள்ளது! இந்த பேரவலத்தில் இருந்து நாம் விடுபட்டு ஆகவேண்டும்! எமது பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய திரு பழ நெடுமாறன் அவர்களே தமிழருவி மணியன் அய்யா அவர்களே நீங்களும் உங்களைப்போன்ற நேர்மையான அரசியலையும் அரசியல் மாற்றத்தையும் விரும்பிநிர்க்கும் ஏனைய தமிழுனர்வுமிக்க செயற்பாட்டாளர்களையும் இணைத்து ஏனைய நாம் மேலே குறிப்பிட்டுள்ள கட்சிகளையும் இயக்கங்களையும் இணைத்து ஒரு வலுவான அரசியல் ௯ட்டணியை சுய விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் முன்மொழிய வேண்டியதும் அவர்களை ஒருங்கிணைத்து ஒரு அரசியல் மாற்றத்தைக்காண ஒரு முன்னேற்ப்பாடு செய்யவேண்டிய கடப்பாடு தமிழர் ஆன்றோர் அறிஞர் தலைவர்களாகிய உங்களிடம் தார்மீகமாக வந்துசேர்ந்திருக்கிறது என்பதை வலியுறுத்தவும் இந்த சந்தர்ப்பத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! இதற்காக அனைத்துக்கட்சிப்பிரதிநிதிகளை அழைத்து நீங்கள் உருவாக்கியுள்ள செயல்திட்டத்தை அவர்களிடம் முன்மொழியவேண்டும்! இதற்காக ''ஏனைய அனைத்து இயக்க'' செயர்ப்பாட்டாளர்களையும் அழைக்கவேண்டும்! அவர்கள் எல்லோரிடமும் தமிழர் ஒற்றுமைக்காகவும் தமிழ் நாட்டின் மேன்மைக்காகவும் தமிழினத்தின் ஆன்ம விடுதலைக்காவும் ஒன்றுபடும் அவசியத்தை வலியுறுத்தி அவர்களை ஒன்றிணைக்கும் பணியினை நீங்கள் திறம்பட மேற்கொள்ள வேண்டும் என்றும் நாம் அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்! தற்போது திராவிடம் என்பது தமிழனை பிரிக்கும் தந்திரத்தின் வடிவம் என முழங்கிவரும் ஒருசாராரை நாம் மிகவும் பணிவோடு கேட்டுக்கொள்வது என்னவெனில் திராவிடம் என்பதை கட்சி பெயரில் கொண்டவர்கள் எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்க வேண்டாம் என்றும் திராவிடம் என்பதை கட்சிப்பெயரில் கொண்டுள்ள இரண்டு பெரும் கட்சிகளுமே தமிழர்களை விழுங்கி ஏப்பம் விட்டுள்ளன என்பதோடு நீங்கள் சொல்வதுபோல ஏனைய கட்சிகளும் அவ்வாறே இருந்தால் இப்போது நாம் முன்மொழிந்துள்ள இந்தக் ௯ட்டணி வரைபு எல்லோருக்கும் ஒரு பாடமாக அமையும்! அவர்கள் தம்மிடம் உள்ள தமிழின விரோதக்கொள்கைகளை அடியோடு கைவிடவோ அல்லது அவர்கள் அரசியல் அரங்கில் இருந்து அடியோடு வேரறுக்கப்படவோ இதுவே தகுந்த வழி என்பதோடு நாம் நண்பர்களையும் சகோதரர்களையும் அயலவர்களையும் எதிரிகளையும் ஒட்டுமொத்த கணிப்பில் இருந்து பெற்றுக்கொள்வது நாகரீக அணுகுமுறையா என்பது நன்கு சிந்திக்கவேண்டிய விடயம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்!
 எனவே இந்த அரிய சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அரசியல் சமூக மாற்றத்தை ஏற்ப்படுத்த உறுதி எடுத்துக்கொள்வதே இன்றைய நாளில் நாம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் சிங்கள பேரகங்காரவாதத்தால் கொல்லப்பட்ட எம் தமிழ் சொந்தங்களுக்காகவும் இந்திய ஏகாதிபத்தியத்தின் அரூபக் கரங்களால் அழிக்கப்பட்ட தமிழீழ அரசிற்கும் நாம் செய்யும் உண்மையான அஞ்சலியும் வணக்கமும் ஆகும்! எனவே அனைவரும் ஒன்றிணைவோம் உறுதியெடுப்போம் தமிழன் தலைவிதியை மதியால் வெல்வோம்!
-நன்றி-
-தமிழ் சோறு முக ஏட்டுக்குழுமம்-

செவ்வாய், 15 மே, 2012

vaiko thelinkar


நாயக்கர் இனத்தில் இருந்தே சொந்த இனத்துக்கு குரல் கொடுக்காத வோட்டு பொறுக்கிகள்

அம்பேத்கரை அவமதித்து சித்திரம் வெளியிட்டதற்கு கொதித்து எழும் வைகோ , உன் சொந்த இனத்தை சேர்ந்த மக்களுக்கு தோளோடு தோல் இல்லாமல் , சுந்தரலிங்கம் என்ற வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எடுபுடியாக இருந்த ஒருவனை உயர்த்தி பேசி வருவதும் என்ன செயல் ??
சாதி மதம் கடந்தவன் நான் என்று சொன்னால் , நாயக்கர்கள் அதிகம் வாழும் பகுதியில் நிற்க மாட்டேன் என்று கூற முடியுமா ?? சாதி வாகுகளுக்காக எங்களிடம் மண்டியிடும் வைகோ , விஜயகாந்தின் மனைவி பிரேமலதா , சுதீஷ் மச்சான் போன்றோர்கள் , எந்த இதுக்கு ஒட்டு கேக்கும்போது தெலுங்கில் பேசி வாக்கு கேட்கிறீர்கள் ,,, வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள் கம்பளத்தார்கள் என்னை கஷ்ட காலத்திலும் கை விடாமால் என்னை தாங்குபவர்கள் , சொன்ன சொல் மாறாதவர்கள் என்று எங்கள் ஊர்களில் எல்லாம் சொல்லிவிட்டு வாக்கு கேட்டுவிட்டு .... இன்று எங்கள் இனத்தை சேர்ந்த 100 பேரை காவல் துறையினர் கைதி செய்து கொடுமை செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் இவர்களை என்ன செய்வது ,,,
வைகோ விற்கு 90 % நாயக்கர் இனத்தின் வாக்குகளை நம்பி தான் அவர் நிற்பார் என்பது தெயர்யாதா ??/ நாடாரோ , தேவரோ , பள்ளனோ வாக்கு அளிபானா ?? நம்ம இனத்தை சேர்ந்தவர் நாயக்கர் என்று தானே இருக்கும் நாயக்கர் இனத்தில் பெரும்பாலானோர் வாக்கு அளித்து வெற்றி பெற செய்கிறோம் ???
நம் இனத்தை நம்பி தானே இந்த கட்சி உள்ளது , இன்று வேண்டும் என்றே கட்டபொம்மன் விழாவை திட்டம் இட்டு நிறுத்தி விடவேண்டும் என்று பல முயற்சிகள் செய்து இருக்கும் பள்ள காவலர்கள் , அதை வெற்றிகரமாக செய்வது நமக்கு தெரிகிறது ,,,


நாம் திரும்ப அடித்தால் ஆதிக்க சாதியினர் வெறிசெயல் என்று தலையங்கம் போட்டுவிடுவார் ,,, தலித் என்ற போர்வைக்குள் ஒளிந்துக்கொண்டு நம் மக்கள் என்ன செய்தாலும் நமக்கு அரசின் சலுகைகள் உண்டு என்று எல்லாம் சொல்லி தப்பித்து விடலாம் என்ற நினைப்பில் அலைந்து கொண்டு இருக்கும் இவர்களுக்கு நமது இனத்தில் பலமான ஒரு தலைவர் தோன்ற வேண்டும் ,,,
இவர்களை பள்ள , பற பயங்க என்று சொன்னாலே தவறாம் ??? இதனால் நேற்று மட்டும் கட்டபொம்மன் விழாவில் ( தலித்களுக்கான அரசியல் சட்டத்தில் நம் மக்கள் பலரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் ) ,,, 
இதற்க்கு முடிவு தான் என்ன ?? நாம் படித்து பல தொழில்கள் செய்தாலும் நம் இனத்துக்கே முன்னிரிமை கொடுத்து அவர்களை முன்னேற்ற வேண்டும் , பல பதவிகளில் உயரவேண்டும் , நம் நாயக்கர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் ,,,,
அப்பொழுது தான் நம் மக்கள் நம் இனத்தை காவல் காத்துக்கொள்ள முடியும் ,,,,
தலைவர்கள் இல்லாத சாதி நாயக்கர் சாதி , நமக்கு நாமே தலைவர்கள் ,,,
ஒவ்வொரு நாயக்கரும் இனி ஒற்றுமையாய் சேர்ந்து , தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் 
ஓட்டுக்காக மட்டும் நம் இனத்தை பயன்படுத்திக்கொள்ளும் சில அரசியல் வாதிகளை ஊருக்குள் சேர்க்காமல் விரட்ட வேண்டும் .

புதன், 9 மே, 2012

திராவிடம் இந்துக்களுக்கு மட்டுமே...

பகுத்தறிவு......பகுத்தறிவு!!.....

பகுத்தறிவு எப்படி பம்ம்பியதுன்னு பாருங்க...ஒரு இஸ்லாமிய விழாவில் நம்ம ராமசாமி நாயக்கர் பம்பிய பேச்சி தான் இது:-

சகோதரர்களே! உங்கள் மத சம்பந்தமான ஒரு சிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்க அழைத்ததற்கு நான் நன்றி செலுத்துகிறேன். என்னை அநேகர் மத துவேஷி என்றும் கடவுள் மறுப்புக்காரன் என்றும் சொல்லுவார்கள். இந்த ஊரிலும் பலர் சொல்லுவார்கள். அப்படியிருக்க நீங்கள் என்னை அழைத்து மிகவும் தைரியமென்றே சொல்ல வேண்டும். எப்படி இருந்தாலும் நான் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எனது அபிப்பிராயத்தை வெளியிட பின்வாங்குவதே இல்லை. சென்ற வருஷத்திலும் இதேமாதிரி கொண்டாட்டத்தில் நான் பேசி இருக்கின்றேன். அதிலும் பல இந்து முஸ்லீம்களுக்கு அதிருப்தி இருந்திருக்கலாமானாலும் அநேகருக்கு திருப்தி ஏற்பட்டு முஸ்லீம்களால் அல்லாசாமிப் பண்டிகை நிறுத்தப்பட்டதற்கு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஆனால் என்பேரில் கோபித்துக் கொண்ட இந்துக்கள் இவ்வூரில் தங்கள் மாரியம்மன் பண்டிகையைக்கூட நிறுத்திவிட சம்மதிக்காமல் மிகுதியும் காட்டுமிராண்டித்தனமான முறையிலேயே நடத்துகின்றார்கள். இப்படியேதான் எங்கும் நடைபெறுகிறது. இந்துக்களை விட இஸ்லாமானவர்கள் அறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் என்பதும் நியாயத்தை ஒத்துக்கொண்டு அதன்படி உடனே நடப்பவர்கள் என்பதும் இதிலிருந்து ஒருவாறு உதாரணமாய் விளங்குகிறது. ஆனால் இன்னும் அநேக விஷயங்களில் திருத்துப்பாடு ஆகவேண்டி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். முஸ்லீம் சீர்திருத்தத் தலைவர்கள் இதை வலியுறுத்திக்கொண்டே வருகின்றார்கள். கூண்டு திருவிழா முதலிய வற்றையும் நிறுத்தி விடுங்கள். இதனால் எல்லாம் இஸ்லாம் கொள்கைகள் கெட்டுப்போகாது. இவை இருந்தால் தான் பரிகாசத்திற்கிடமானதாகும்.

இந்த முக்கியமான நாள் என்பதில் வேலூர் மௌல்வி சாயபு அவர்கள் குர்ஆனின் மேன்மையையும் திரு. முகமது நபி அவர்களின் உபதேசத்தின் பெருமையையும் பற்றி சொன்னார்கள். என்னால் அந்தப்படி சொல்ல முடியாது. ஏனெனில் நான் அவற்றை படித்துப் பார்த்தவனல்ல. அந்த வேலைக்கு நான் போவதுமில்லை. நான் அதற்கு அருகனுமல்ல. அப்படி ஏதாவது நான் படித்து அதைப்பற்றி இங்கு பேசுவது என்பதும் அதிகப்பிரசங்கித்தனமேயாகும். ஏனெனில் பெரிய பெரிய மௌல்விகள் இருக்கும் போது அவர்கள் முன் நான் என்னதான் படித்தாலும் என்ன பேச முடியும்? அன்றியும் புஸ்தகத்தில் இருப்பதை விட பிரத்தியக்ஷத்தில் உள்ளதைப் பற்றிப் பேசுவதே பலனளிக்கக்கூடும். நான் இந்த சந்தர்ப்பத்தை எதற்கு உபயோகித்துக் கொள்ள கூடுமென்றால் மக்களிடம் பிரத்தியக்ஷத்தில் காணும் விஷயங்களைப் பற்றியும் இன்னமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற விஷயத்தைப்பற்றியும் பேசுவதும் பயன்படுவதாகும் என்று கருதுகின்றேன்.

திரு.நபி அவர்களின் இவ்வளவு அருமையான உபதேசம் என்பவற்றில் உலக மக்கள் எல்லாம் பயன்அடையும்படி செய்ய என்ன என்ன செய்யவேண்டும் என்பதற்கு ஆகவே நீங்களும் இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளப்பார்க்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

செட்டி முடுக்கா? சரக்கு முடுக்கா?

இஸ்லாம் மார்க்கம் “மக்களுக்கு உபதேசிப்பதிலும் வேதவாக்கியங்களிலும் மேன்மையானதாய் இருக்கின்றது” என்கின்ற திருப்தியானது மனிதசமூகத்திற்கு எல்லாப் பயனையும் அளித்துவிடாது. ஆனால் அதன் தத்துவத்திற்கொப்ப காரியத்தில் அதன் பயனை உலகத்தில் மேன்மையுறச் செய்து மக்களுக்கு நல்ல வழிகாட்டியாகி உலகமக்களை ஒன்றுபடுத்தவும் அனைவரையும் சகோதரத்தன்மையுடனும் இருக்கவும் பகுத்தறிவுடனும், சுயமரியாதையுடனும், சுதந்திரத்துடன் வாழவும் செய்யவேண்டும். எந்தக் கொள்கைக்காரனும் புஸ்தகத்தில் இருப்பதைக்கொண்டு தங்கள் முன்னோர்கள், பெரியார்கள் சொன்னார்கள் என்பதைக் கொண்டு இனி உலகத்தை ஏய்க்க முடியாது.

உலகம் பகுத்தறிவுக்கு அடிமையாகி எதையும் பிரத்தியக்ஷ அனுபவத்தைக் கொண்டு பரீட்சித்து சரிபார்க்க வந்துவிட்டது. அதற்கு துணிந்தும் விட்டது. செட்டி முடுக்கு செல்லாது. சரக்கு முடுக்காய் இருந்தால்தான் இனி செலாவணியாகும். ‘என் சரக்கை பரீக்ஷிக்கலாமா?’ என்கின்ற அடக்குமுறை இனிப்பலிக்காது. ‘அவர் ஒஸ்தியென்று சொன்னார்.’ ‘இவர் ஒஸ்தியென்று சொன்னார்’ ‘ஆண்டவன் சொன்னான்’ என்பதெல்லாம் அனுபவத்திற்கு நிற்காவிட்டால் காரியத்தில் நடந்து காட்டா விட்டால் இனி மதிப்புப்பெற முடியாது. ஆதலால் எந்தச்சரக்கின் யோக்கியதையும் கையில் வாங்கிப்பார்த்துதான் மதிக்க வேண்டியதாகும். அந்த முறையில் இஸ்லாம் கொள்கை என்பதும் முஸ்லீம் மக்களின் நடத்தையைக் கொண்டும் அவர்களது பிரத்தியட்சப்பயனைப் கொண்டும் தான் மதிக்கப் படமுடியும். உலகம் சிரிக்காதா?

இந்துக்கள் தேரிழுப்பதைப் பார்த்து முஸ்லீம்கள் பரிகாசம் செய்து விட்டு முஸ்லீம்கள் கூண்டுகட்டி சுமந்து கொண்டு கொம்பு, தப்பட்டை, மேளம், பாண்டு, பாணம் வேடிக்கைசெய்து கொண்டு தெருவில் போய்க் கொண்டிருந்தால் உலகம் திருப்பிச் சிரிக்கமாட்டாதா? என்று யோசித்துப் பார்க்கவேண்டும். இந்துக்கள் காசிக்கும், ராமேஸ்வரத்திற்கும் போய் பணம் செலவழித்துவிட்டு “பாவம் துலைந்துவிட்டது” என்று திரும்பி வருவதைப் பார்த்து முஸ்லீம்கள் சிரித்துவிட்டு முஸ்லீம்கள் நாகூருக்கும், முத்துப் பேட்டைக்கும், மக்காவுக்கும் பணத்தை செலவு செய்து கொண்டு போய் விட்டு வந்து தங்கள் “பாவம் எல்லாம் துலைந்து விட்டது” என்று கருதிக் கொண்டு புதுக்கணக்குப்போட வந்தார்களானால் மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா? என்று நினைக்க வேண்டும்.

மக்கள் மார்க்கத்தைக் காப் பாற்றுவதென்றால் கொள்கைகளை பகுத்தறிவுக்கு இணங்கி இருக்கும்படி ஜாக்கிரதையாய் பார்த்து பயன்படுத்தவேண்டும். “தீர்க்கதரிசிகள் பகுத்தறிவுக்கு விறோதமாய் சொல்லி இருக்கமாட்டார்கள்” என்று கருதி அவற்றை தன் இஷ்டப்படி அருத்தம் செய்து கொண்டு பிடிவாதமாய் இருப்பது மூட நம்பிக்கையைவிட மோசமானதாகும். அம்மாதிரி மூட நம்பிக்கையின் பயனாய் தீர்க்கதரிசிகள் என்பவர்கள் சொன்னதின் கருத்தையும், உண்மையையும் அறிந்து கொள்ள முடியாமலும் போகும்.

பகுத்தறிவு

நமக்குப் பகுத்தறிவையும் நடுநிலைமையையும் எதிலும் பயன்படுத்த உறுதியும், துணிவும் இருந்தால்தான் உண்மையைக் கண்டு பிடிக்கவே முடியும். நாம் அறிவை உபயோகப்படுத்தாமல் நபிகள் வாக்கியத்திற்கு புரோகிதர்கள் சொல்லுகின்றபடி தப்பர்த்தம் செய்து கொண்டு ‘இதுதான் நபிகள் சொன்னது’ என்று சொன்னால் நபிகளுக்கு மரியாதை செய்ததாகுமா? நமது சொந்தக்கண்ணை பரிசுத்தப்படுத்திப் பரீட்சித்துப்பார்க்க வேண்டும். சாளேசரம் இருந்தால் சரியாய்த் தெரியாது. பக்கப்பார்வையாய் இருந்தாலும் சரியாய்த் தெரியாது. இரண்டுக்கும் தகுந்தபடி தூரத்தை சரிபடுத்தி நல்ல கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டும்.

மஞ்சள் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால் மஞ்சளாகத்தான் தெரியும். சிகப்பு சிகப்பாகவும், பச்சை பச்சையாகவுந்தான் தெரியும். நல்ல சுத்தமான எந்தவித நிறமும் இல்லாத கண்ணாடிகொண்டு பார்க்கவேண்டும். அது போலவே தைரியமான பகுத்தறிவுடன் சுத்தமான நடுநிலைமை மனதுடன் எதையும் பார்க்கவேண்டும். கண்ட உண்மையை தைரியமாய் வெளியில் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிக்கில்லாமல் தங்களுக்கு தெரிந்த தப்பிதங்களை மூடி வைத்திருந்தால் கடைசியாக ரிபேர் செய்யமுடியாத அளவு மோசமானதாகி விடும்.

நீங்கள் பார்க்கின்ற கண்ணும், நீங்கள் செய் கின்ற அருத்தமும், நீங்கள் அறிந்த மாதிரியும் யுக்திக்கும், அனுபவத்திற்கும் பொறுத்திப் பாராமல் எல்லாம் சரியானதாகத்தான் இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். உங்களைப்போன்ற மற்றவர்கள் எப்படி நினைத்தார் கள்? நினைக்கிறார்கள் என்று பாருங்கள்.

மற்றவர்கள் மதிப்பது

நபி அவர்கள் உபதேசங்களை துருக்கியர் எப்படி மதிக்கின்றார்கள்? எப்படி அர்த்தம் செய்கின்றார்கள்? அவர்கள் என்ன பலன் அடைகின்றார்கள்? என்பவைபோல உலகத்தின் முஸ்லீம்களின் நடப்பு முழுவதையும், அமுலையும், பலனையும் நன்றாய் கவனித்துப் பார்க்க வேண்டும். உங்கள் ‘எதிரி’ மதத்தை (கொள்கைகளை) பரிசோதிப்பதுபோல் எதிரிஆதாரத்தை எந்தெந்த வழியில் பரிசோதித்து நியாயம் அநியாயம் சொல்லுவோமோ அந்த நோக்கத்துடன், அந்த வேகத்துடன் உங்கள் கொள்கைகள் என்று உங்களுக்குப் புரோகிதர்களால் போதிக்கப்பட்டு நீங்கள் நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பரிசோதித்துப் பார்க்கவேண்டும்.

கண்ட உண்மையை வீரத்துடன் வெளியிட்டு குற்றமிருப்பின் திருத்தவேண்டும். மனிதன் முடிவுபெற்ற முற்போக்கானவன் என்று யாரும் கருதிவிடக்கூடாது. உலகமும் முழு முற்போக்கை அடைந்து விட்டதாகக் கருதிவிடாதீர்கள். திருத்தம் அவசியமானால் திருத்தியாக வேண்டும். திருத்தம் சரியென்று பட்ட வழியில் மனம் திரும்ப பயமோ வெட்கமோ அடையக்கூடாது.

இந்தியாவும் அப்படித்தான்

நபி அவர்கள் தோன்றிய காலத்தில் அரேபியாதேசம் எப்படி இருந்ததென்று மௌல்வீ சாயபு அவர்கள் சொன்னார்களோ அப்படியேதான் இன்னமும் இந்தியா இந்து கொள்கைகள் இருந்து வருகின்றது. அரேபியர்களிடத்தில் பெண் குழந்தை பிறந்தால் துக்கப்பட்டு கொல்லுகின்ற வழக்கம் இருந்ததாக மௌல்வி சாயபு சொன்னார்கள். இந்துக்களிடத்திலும் பெண் குழந்தை பிறந்தால் துக்கப்படும் வழக்கம் இன்னும் இருக்கின்றது. சமீப காலம் வரை பெண்களை பெரிய பெரிய பெண்களை புருஷன் இறந்துபோனால் பக்கத்தில் உயிருடன் வைத்து நெருப்புக்கொளுத்தும் வழக்கம் இருந்து வந்தது. இன்றும் பெண்களை அதைவிடக் கேவலமாய் விதவை என்று சொல்லி சகுனத்தடையாகப் பாவித்து கொடுமைப்படுத்தும் முறை இருந்துதான் வருகின்றது.

அரேபியர் பல கடவுள்களை வணங்கினதாகச் சொன்னார்கள். அதுபோலவே இன்றும் இந்துக்கள் ஒவ்வொருவரும் பல கோடிக்கணக்கான கடவுள்களை உருவத்துடன் மாத்திரமல்லாமல் பெண்டு, பிள்ளை வைப்பாட்டி ஆடு மாடு குதிரை யானை எலி பெருச்சாளி மயில் கெருடன் பாம்புவாகிய உருவங்களுடன் வணங்குகின்றார்கள். இவையெல்லாம் கீழ் மக்கள் என்று சொல்லுகின்றவர்களிடம்தான் இருக்கின்றது என்று நினைத்து விடாதீர்கள். மேல்மக்கள் என்று மதத்தின்பேரால் முடிவு கட்டப்பட்ட மக்களிடமே இருக்கின்றது. ஆதலால் திரு.மகமதுநபி அவர்கள் தோன்றுவதற்கு முன் அரேபியா பாலைவனம் எப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தில் இருந்ததோ அதுபோலவேதான் இன்றைய வரையில் இந்தியாவின் இந்து சமூகம் இருந்து வருகின்றது.

இந்த லட்சணத்தில் இதை எடுத்துச் சொன்னால் இந்துக்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இல்லை. இந்தமாதிரியான ஒரு மதசம்பந்தமான முக்கிய நாள் என்பதற்கு உங்களைப் போல் இந்துக்கள் என்னைக் கூப்பிட வும் மாட்டார்கள். நான் ஏதாவது சொன்னால் பொறுக்கவும் மாட்டார்கள். என்னை வைவதையே அவர்கள் மதப்பிரசாரமாய் கருதுவார்கள். ஆனால் இஸ்லாம் கொள்கை என்பது எவ்வளவு பெருமையாய் எவ்வளவு சகோதரத் தன்மையாய் யாரையும் எந்தவித அபிப்பிராயக்காரனையும் கூப்பிடவும் அவர்கள் சொல்லும் எதையும் பொருமையாய் கேட்கவும் இருக்கின்ற சுதந்திரத்தைப் பார்த்து இவ்விஷயத்தில் இந்துக்கள் வெட்கப்பட வேண்டுமென்றே சொல்லுவேன்.

துலுக்கர் துடுக்கரா?

மௌல்வி ஆஜீ அப்துல் கரீம் சாயபு அவர்கள் துலுக்கன் துடுக்கன் என்று இந்துக்களால் சொல்லப்படுவதாய்ச் சொன்னார். இது இந்துக்களுக்குள் பலமில்லாத காரணத்தாலும் தங்களுக்குள் வீரமும் ஒற்றுமையும் இல்லாத காரணத்தாலும் சொல்லப்படுவதேயாகும். முஸ்லீம்களுக்குள் இருக்கும் ஒற்றுமையும் வீரமும் இந்துக்களுக்கு துடுக்கர்களாய் காணப்படுவது அதிசயமில்லை. என்னை ஒரு சாயபு அடித்தால் ஒரு அய்யரோ ஒரு செட்டியாரோ ஒரு முதலியாரோ சிபாரிசுக்கு வரமாட்டார். ஏனெனில் ஜாதிப்பிரிவு காரணமாக இந்துக்களுக்குள் சகோதரத்தன்மை இல்லாமல் போய்விட்டது. ஒருவனுக்கு மற்றவர்களிடம் அன்பு இல்லாமல் போய் விட்டது. ஜாதிப்பிரிவு இல்லாத காரணத்தாலேயே முஸ்லீம் மக்களுக்கு சகோதரத்தன்மை இருந்து வருகின்றது.

சகோதரர்களை தாராளமாய் உடையவனைக் கண்டால் யாரும் அஞ்சுவது வழக்கம்தான். ஆதலால் இந்துக்கள் உங்களை குற்றம் சொல்லுகிறார்களே என்று கருதி உங்கள் சகோதரத்தன்மையையும் வீரத்தையும் நழுவவிட்டு விடாதீர்கள். எண்ணிக்கையில் கொஞ்சமாயிருந்தாலும் உலகத்தில் நீங்களும் தலைசிறந்து விளங்கக் காரணமே உங்கள் சகோதரத்தன்மையே யாகும். ஆகையால் அதைவிட்டு விடாதீர்கள். ஆனால் மற்ற கொள்கைக்காரரையும் உங்கள் சகோதரர்களாக ஆக்கிக்கொள்ள முயலுங்கள். அதற்குத் தடையாயிருக்கும் சாதாரண காரியங்களையும் வெரும் வேஷமாத்திரத்தால் இருக்கும் வித்தியாசங்களையும் லக்ஷியம்செய்யாமல் ராஜிக்குத் தயாராயிருங்கள். இந்த வகையில் தான் ஒவ்வொரு கொள்கையும் செல்வாக்குப் பெற்று தலை சிறக்கமுடியும். இஸ்லாம் கொள்கையைப்பற்றி யாராவது தப்பிதமாய் நினைத்திருந்தால் தைரியமாய் திருத்த முற்படுங்கள்.

சந்தேகத்தை திருத்துங்கள்

உதாரணமாக மக்கா யாத்திரையைப் பற்றி மலேயா நாட்டில் உள்ள கிடாசுங்கப்பட்டானியில் என்னிடம் ஒரு இந்து என்பவர் ஒரு கேள்வி கேட்டார். அதாவது ‘இந்துக்களது காசி ராமேஸ்வரம் மதுரை யாத்திரையை மூடநம்பிக்கை என்கின்றாயே, இஸ்லாமானவர்கள் மக்கா யாத்திரை செய்ய மலேயாவில் அநேக முஸ்லீம்கள் செல்வதால் கஷ்ட நஷ்டப்படுகின்றார்களே’ என்றார். நான் பதில் சொல்லமுடியாமல் அப்படியானால் முஸ்லீம்கள் அநுசரிக்கும் கொள்கைகள் முழுவதும் பகுத்தறிவுக்கொள்கை என்று நான் சொல்லவரவில்லை என்றும் அதில் அநேக நல்ல கொள்கை பிரத்தியட்சத்தில் பார்க்கிறேன் என்றும் சொன்னேன்.

பிறகு சென்ற வருஷம் இதே கொண்டாட்ட நாளில் ஈரோட்டிற்கு வந்த மௌல்வி அப்துல் அமீது சாயபு பாகவியவர்களைக் கேட்டேன். அவர் விளக்கமாக்கினார். முஸ்லீம்கள் மக்காவுக்குப் போவதில் செல்வத்திலும், சரீர திடத்திலும் தகுதியுள்ளவர்கள் தான் போகவேண்டுமென்று இருக்கின்றதே தவிர எல்லோரும் போய்த்தீர வேண்டுமென்று இல்லை யென்றும் அந்த இடம் முகம்மதுநபி அவர்கள் உண்மையில் பிரத்தியட்சத்தில் பிறந்தஇடம் என்பதற்காக அங்கு போவது என்பது தவிர வேறு அற்புதமில்லை என்று அறிவு வளர்ச்சிக்கும் மற்ற மக்கள் நடை,

உடை, நாகரீகம் பார்த்து வரவும் பயன்படும் படியான ஒரு யாத்திரை என்றும் “கொலை களவு கொள்ளை நடத்தின பாபம் தீர்ந்து விடும் என்று சொல்லுவது தப்பு” என்றும் அந்த மாதிரி எண்ணத்துடன் யாரும் போவதில்லை என்றும் சொன்னார். யாராவது அந்தப்படி போனாலும் அது தெரியாத்தனமென்றே சொன்னார்கள். ஆகவே மக்களிலேயே பிறவியில் வித்தியாசமில்லை என்று சொல்லும் கொள்கையில் இடத்திற்கு இடம் வித்தியாசம் கற்பிக்கப்பட்டு இருக்காது என்பது பகுத்தறிவில் பட்டதேயாகும். ஆனால் இந்து கொள்கைகள் என்பவற்றில் ‘ஒரு மனிதன் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும், கொலை செய்தாலும், திருடினாலும், நம்பிக்கை துரோகம் வஞ்சகம் முதலிய காரியம் செய்தாலும், ஒரு ஊரை நினைத்தால் ஒரு ஊருக்குப் போனால் ஒரு ஊரில் ஒரு குளத்திலுள்ள தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டால் பாபம் பரிகாரமாகிவிடும், மோட்சமடைந்து விடுவான்’ என்று எவ்வளவோ அடியோடு பொய் பெருமைகளை கற்பித்து மூடநம்பிக்கை உண்டாக்கி அங்குள்ள சோம்பேறிகள் பிழைக்க ஸ்தல யாத்திரை ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற தென்றும், அப்படிப்பட்ட ஸ்தல யாத்திரைப்புரட்டுகள் எல்லாம் பகுத்தறிவுக்கு விறோதமானது ,மூடநம்பிக்கையில் பட்டது என்றும் சொல்லும்போது மற்றவர்கள் யாராவது அது போல் செய்தாலும், அந்தந்த தலைப்பின் கீழ்தான் வருமல்லவா? என்பதை யோசித்து நடக்க வேண்டியது மக்கள் கடமையாகும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

இப்படிப்பட்ட நாள்

ஆகவே இப்படிப்பட்ட அருமையான நாட்களை மனிதன் மேன்மைக்கும் முற்போக்கிற்கும் ஒற்றுமைக்கும் அறிவு விளக்கத்திற்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே இங்குள்ள இந்து முஸ்லீம்களை சகோதரர்களாகக் கருதியே என் மனதில் பட்டதைச் சொன்னேன். மௌல்வி சாயபு அவர்கள் இருவரும் சொன்ன விஷயங்களிலும் பெரிதும் அறிவுக்கு விறோதமானதோ கேள்விக்கு இடமானதோ இல்லை என்பதை முக்கியமாய் முஸ்லீம்களும் மற்ற இந்துக்களும் கவனித்துப் பார்த்து இதுபோலவே எல்லாக் கொள்கைகள் விஷயங்களிலும் பகுத்தறிவுடனிருக்க வேண்டுமென்றே கேட்டுக் கொள்ளுகிறேன்.

மற்றும் நான் சொன்ன விஷயங்களில் உங்கள் பகுத்தறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஒப்புக் கொள்ளாததைத் தள்ளி விடுங்கள். மற்றும் இம் மாதிரி நாட்களை வெறும் விருந்துக்கு உபயோகித்துக் கொள்ளாதீர்கள். இன்று சுமார் 500 ரூ. வசூல் செய்து பெரிய விருந்து சாப்பாடு செய்து சாப்பிட்டதாகத் தெரிகின்றது. இது பிரயோஜனமில்லை. பணங்கள் வசூல் செய்து பகுத்தறிவு பிரசாரம் செய்யவும் ஏழை மக்களுக்கு கல்விக்கும் கொள்கைகளின் உண்மை தத்துவத்தை பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்த்து பயன்படுத்தும் தத்துவத்திற்கும் உபயோகிக்கச் செய்யவும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

02.08.1931 அன்று ஈரோடு முஸ்லீம் வாலிப சங்கக்கட்டிடத்திற்கு முன் நடைபெற்ற நபிகள் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய தலைமையுரை – “குடி அரசு” – சொற்பொழிவு – 09.08.1931

திங்கள், 7 மே, 2012

திராவிட சாதனைகள்...

தமிழ்நாட்டின்
நிலத்தடி நீரை பெப்சி,கோக்
சூரையாடுகிறது.
வேளாண்மையை மான்சாண்டோ,
கார்கில் சூறையாடிக்கொண்ட
ிருக்கிறது.
வணிகத்தை வால்மார்ட்,ரிலை
யன்ஸ்சும் ஆன்லையன்
வர்தகமும்
சூறையாடிக்கொண்டுள்ளது.
மணல்&பாறைகள்
எல்&டி கொள்ளையடிக்கிறது.
மால்கோ,ஸ்டெர்லைட்,
டாடா,டால்மியா சுரண்டிக்கொண்டு
ள்ளது.
தமிழகத்தின் நீர் ஆதாரங்கள்
அனைத்தும்
அமிலக்குட்டைகளா
கவும் ,அணு மின்நிலையமுள்ளி
ட்ட வேதிப்பொருளான்
குப்பை மேடாகவும் உள்ளது.
பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு
ஆதாரமான வனநிலங்கள்
மஞ்சுஸ்ரி,மகாவீர்,கிளன்ராக்,சி
ல்வர் கிளவுட்,ராக்வுட
்,நான்சச்,ரோசன்மலை,பாரிஅக்ரோ,இந்துஸ்தான்
யுனிலீவர்,மளையாளம்
பிளான்டேசன் என
பன்னாட்டுஇந்திய-
தரகு நிறுவனங்கள்
99ஆண்டு குத்தகை என்று ஆக்கிரமிப்பு மூலம்
கொள்ளையடிக்கப்படுகின்றது.
வேளாண் நிலங்கள் சிறப்புப்
பொருளாதாரமண்டலங
்களாகவும்
தாரை வார்க்கப்மட்டுள்ளன.
மொத்தத்தில் தமிழினத்தின்
மீது மாபெறும்
பொருளாதாரயுத்தம்
கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது
.
தமிழகம் அரசியல் ரீதியாகவும்
இந்தியாவிற்கு அடிமைப்பட்டு கிடக்கிறது.
தமிழகத்தின்
ஆட்சி,அலுவல்,கல
்வி,வழிபாடு மொழியாக
இல்லை.
2000ஆண்டுகளாக அதன்
அடிமைப்பட்டு கிடக்கும்
தமிழகம்
தனது இறையான்மையை(மொழ
ி,கல்வி,வேளாண்ம
ை,அரசியல்)
இழந்து கிடக்கிறது .இந்திய
தரகு பார்பனிய வல்லரசின்
பிடியில் வீழ்ந்து கிடக்கும்
தமிழகம்
தனது இறையாண்மையை மீட்டெடுப்பது தமிழகவிடுதலை மூலமே சாத்தியம்.
தோழமையுடன்
@வெற்றிக்கனல்

வியாழன், 3 மே, 2012

thiravida poison


சுபவீ..... ஒரு மனநோய் வைத்தியநிபுணர்?
சுபவீ என்று அழைக்கப்படும் பேராசிரியர் சு.ப.வீரபாண்டியன் அவர்களுக்கு ஒரு பகிரங்கமடல்.
ஐயா! அண்மையில் மனநோய் என்பதற்கு நீங்கள் கொடுத்திருந்த வரைவிலக்கணம் மிகவும் அருமையாகவிருந்தது.
அதாவது, ‘மீனவர்கள் சிங்களரால் கொல்லப்படுவதற்கு, திராவிடமே காரணம் ‘ என்று யாராவது சொன்னால், அதுவே ஒருவகை மனநோய்க்கான அறிகுறி என்ற உங்கள் கண்டுபிடிப்பு உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியதொன்றுதான்.( நோபல்?| கின்னஸ்?)
எனினும், பேராசிரியர் எனும் நிலையிலிருந்து நீங்கள் , மனநோய்வைத்திய நிபுணர் எனும் அவதாரம் எடுத்தது எப்போது? என்பதுதான் எமக்குப்புரியவில்லை.
நீங்களே உதிர்த்த தத்துவத்தின் அடிப்படையில் , உங்கள் முதுகையே ஒருமுறை திரும்பிப்பாருங்கள் ஐயா!
மனநோயாளி யார் என்பது தானாகவே புரியும்.
நினைவிருக்கிறதா சுபவீ அவர்களே?
பார்வதியம்மாள் திருப்பியனுப்பப்பட்ட விவகாரத்தில்,
தோழர் தியாகுவுக்கு நீங்கள் என்ன பதில் கொடுத்திருந்தீர்கள்?
இந்த நேரத்தில் முதல்வரை நான் எப்படித் தொல்லை செய்ய முடியும்?
இது நீங்களே வெளியிட்ட தகவல்தான்.
இந்தப்பதில் சரியானதுதானா?
முதல்வர் என்றாலே, மக்களுக்காகத் தனது உடல், பொருள், ஆவி என்று அத்தனையையும் அர்ப்பணித்துக்கொண்டவர் என்பதுதான் பொருள்.
அதிலும் உங்கள் முதல்வரோ அனைத்துக்கும் ஒருபடிமேலே உள்ளவர் _ (உங்கள் கருத்துப்படி).
அதாவது, தமிழ்மொழி இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறதென்றால், அஃது அவராற்றான். உலகத்தமிழினத்துக்கே
ஒப்பற்ற ஒரு தலைவர் அவர் _ (உங்கள் கருத்துப்படி)
பார்வதியம்மாள் உலகத்தமிழினத்தின் ஓரங்கமில்லையா?
ஒரு நோயாளியாக வாசல்வரை வந்த தமிழ்த்தாயை, வரவேற்க ஓடோடிச்செல்லவேண்டியவரல்லவா அவர்?
பார்வதியம்மாளோ, வயதான ஒரு நோயாளி ; உங்கள் முதல்வரும் அப்படியா?
நாலாவது வாழ்க்கையில் அடியெடுத்துவைக்கத்துடிக்கும் ஒரு இளைஞனல்லவா உங்கள் முத்தானமுதல்வர்?
தமிழுக்காகவே உயிரைத்தக்கவைத்துக்கொண்டிருக்கும் அவரெல்லாம்,நேரம் காலம் பார்க்கலாமா?
இதை அவரே மறந்தாலும் , அவருக்கு மந்தி(ரி) போலியங்கும் உங்களைப்போன்றவர்கள் நினைவூட்டவேண்டாமா?
அடுத்து, நீங்கள் அதில் குறிப்பிட்டிருப்பது : இலண்டனிலிருந்து ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இதில் உதவி செய்யுமாறு கேட்டதற்கு, நீங்கள் ஏதோ ‘கிடுக்குப்பிடி‘ கேள்வி கேட்டு மடக்கிவிட்டதுபோன்ற எக்காளத்தொனியுடன் கூடியது.
அவர் கேட்டது ஒரேயொரு கேள்வி ; அதற்கு நீங்கள் கொடுத்ததோ மூன்று வெவ்வேறான பதில்கள் _ அதிலும் ஒருசில கேள்வி வடிவிலேயே.
அதில் முக்கியமானதொன்று : இப்போதுதான் கருணாநிதியையும் என்போன்றவர்களையும் உங்களுக்கு ஞாபகம்வந்ததா? என்பதுதான்.
இதில், அந்த ‘ என்போன்றவர்கள் ‘ என்ற சொற்றொடரின்மூலம் எதைக்கருதினீர்கள் வீரபாண்டியரே?
நிச்சயமாக, ‘ துரோகிகள் ‘ என்பதைத்தானே இதிற் சொல்லாமற் சொல்லியிருக்கிறீர்கள்?
சாதாரணர்களான எமக்கே புரிவது, பேராசிரியரான உங்களுக்குப் புரியாமற்போகுமா?
இது எப்படி இருக்கிறது தெரியுமா?
வீடு பற்றி எரிகிறது ; தீயை அணைக்க உதவிசெய் “ என்று கேட்டால், “ நீ நேற்றே சொல்லியிருந்தால் அணைத்திருப்பேன் ‘ இன்று நேரமில்லை “ என்பது போலல்லவா இருக்கிறது?
இதையெல்லாம் பார்த்தால், மனநோய் உள்ளவன் சொல்வது போல் தெரியவில்லையா உங்களுக்கு?
இனி, பிரபாகரனின் பெற்றோரை, இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாதுஎன்று ஜெயலலிதா கடிதம் எழுதியதைக்கண்டிக்காதவர்கள்... என்று பழையபுராணம் பாடுகிறீர்களே!
அந்தநேரம் நீங்கள் எங்கு போயிருந்தீர்கள்?
புலிகளின் பணத்தில் உல்லாசப்பயணம் மேற்கொள்பவர் எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அளவுக்கு, தீவிர(?)_ புலி ஆதரவாளராக அறியப்பட்டவர்தானே நீங்கள்?
ஒருவார்த்தை கண்டித்துப்பேசியதுண்டா?
ஏன்? அதிகம் வேண்டாம் ; நீங்கள் இன்று தூக்கிப்பிடிக்கும் திமுக கூட எவ்விதமான எதிர்ப்பும் காட்டவில்லை என்பதுதான் உண்மை.
ஏற்கெனவே ‘ இம் என்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம் என்றிருக்கும் இந்தியாவில், அன்று தடாபோடா என்று என்னென்னமோ கொடுஞ்சட்டங்களெல்லாம் இருந்தது நீங்கள் அறியாததா?
நீங்கள்கூட அதில் நேரடியாகப்பாதிக்கப்பட்டவர்தானே?
இதில் யாரால் வாய்திறக்கமுடியும்?
‘ ஜெயலலிதா நெஞ்சில் குத்தினார் ;கருணாநிதி முதுகில்அல்லவா குத்திவிட்டார் ‘
இந்தப்பொன்மொழி ஞாபகத்தில் இருக்கிறதா? இதை உதிர்த்தவர் வேறு யாருமில்லை ;சாட்சாத் சு.ப.வீரபாண்டியன் என்கிற நீங்கள்தான் ஐயா! நினைவாற்றல் மிகுந்தவரல்லவா நீங்கள்? எனவே, புலம்பெயெர் தொலைக்காட்சியொன்றில், அன்று திருவாய் மலர்ந்தருளியதை நிச்சயமாக மறந்திருக்கமாட்டீர்கள்.
அவ்வப்போது மனதிற்தோன்றுவதையெல்லாம் பேசுகிறீர்கள்....
உங்களைத்தவிர மற்றவர்களெல்லாம் , நினைவாற்றலே அற்றவர்கள் என்று நீங்களே முடிவெடுத்துவிடுகிறீர்கள்............
இதுமட்டும் மனநோயாகத்தெரியவில்லையா உங்களுக்கு ?
இனி, விடயத்துக்கு வருவோம்.
அன்றாட வயிற்றுப்பிழைப்புக்காக, காற்று, மழை, வெயில் என்றெல்லாம்பாராது, கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களை , ஏதோ தெருநாய்களைச்சுட்டுத்தள்ளுவதுபோல, சிங்களக்கடற்படை சுடுவதும், அதற்கு உங்கள் முதல்வர் அழகுதமிழ்தேடி, அவரது சொக்கத்தங்கம் சோனியாவுக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருப்பதுவும்கூட உங்களுக்குப் பெரிதாகப்படவில்லை.
உயிருக்காகப்போராடும் ஒருவனைக்காப்பாற்ற, அம்புலன்ஸ் எனப்படும் அவசரஉதவி வண்டிக்கு யாராவது கடிதம் எழுதி அனுப்பினால், அந்த நபரை என்னென்பது?
அதைத்தானே உங்கள் முதல்வர் செய்துகொண்டிருக்கிறார்?
இந்த மனநோயைக் கண்டுகொள்ளாமல்விடுவதற்காக, அங்கிருந்து எவ்வளவு கிடைத்தது உங்களுக்கு?
யாரோ சென்னையில் ஒரு பதாதை வைத்துவிட்டார்கள் என்று , அதற்கு மனநோய்ப்பட்டம் சூட்டுகிறீர்கள்.
‘ திராவிடத்தின் பெயரால் நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டதால்இப்படிப் படுகொலைகள் தொடர்கின்றன
இந்தக்கூற்றில் என்ன தவறு உள்ளது என்று இப்படிப்புலம்புகிறீர்கள்?
ஒருவேளை இதையே,
திராவிடத்தின் பெயரால் சென்னையில் மழைபெய்யவில்லை
என்று பதாதை வைத்திருந்தால், நீங்கள் சொன்னதில் நியாயம் இருந்திருக்கும்.
ஆனால், திராவிடத்தின்பெயரால் தமிழன் ஏமாற்றப்படுகிறான் என்பது தமிழகஅரசியலை அறிந்தஅனைவரும் அறிந்ததொன்றுதானே!
மாறிமாறி ஆட்சிக்குவரும் திராவிடக்கட்சிகள், தமிழர்நலன்களைப் புறக்கணிக்கின்றன என்பதை அறிந்துகொள்ள, பூதக்கண்ணாடியாவேண்டும்?
மாறாக, மலேசியாவின் பினாங்குமாநில துணைமுதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி போன்ற, தமிழுணர்வாளர் ஒருவர் தமிழகத்தின் முதல்வரானால், காவிரிப்பிரச்சினை தொடங்கி , மீனவர் பிரச்சினைவரை எப்போதோ முடிவு கிடைத்திருக்கும்.
இப்போது சொல்லுங்கள் _ யார் மனநோயாளி?
தயவுசெய்து உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள் _ ஒரு மனநோய்வைத்திய நிபுணராக.
இஃதே உங்களுக்கும் நல்லது ; தமிழினத்துக்கும் நல்லது.
இப்படிக்கு
சிவம் அமுதசிவம்